தென் இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும் (7th சமூக அறிவியல்)

 

தென்இந்தியப் புதிய அரசுகள் பிற்காலச் சோழர்களும், பாண்டியர்களும்          

1.     பண்டைய சோழ அரசின் பகுதி - காவிரி கழிமுகப் பகுதி.

2.     பண்டைய சோழ அரசின் தலைநகரம்- உறையூர் (திருச்சிராப்பள்ளி).

3.     9 - ஆம் நூற்றாண்டில்  சோழ வம்சத்தை மீட்டெடுத்தவர்-விஜயாலயன்.

4.     தஞ்சாவூரைக் கைப்பற்றி தலைநகராக ஆக்கியவர் - விஜயாலயன்.

5.     முதலாம் இராஜேந்திரனும் அவருக்குப்பின் வந்தோரும் எந்த இடத்தை தலைநகரமாக கொண்டு ஆட்சி செய்தனர்- கங்கைகொண்ட சோழபுரம்.

6.     சோழப் பேரரசின் மாபெரும் வல்லமை பெற்ற பேரரசர் - முதலாம் ராஜராஜன் . 985 -1014.

7.     ராஜராஜேஸ்வரம் கோவிலைத் (பிரகதீஸ்வரர்கோவில்) தஞ்சாவூரில் கட்டியவர் - முதலாம் ராஜராஜன்.

8.     முதலாம் ராஜராஜன் மகன் – முதலாம் ராஜேந்திரன். 1014 – 1044.

9.     முதலாம் ராஜேந்திரன் அரியணை ஏறிய ஆண்டு - 1023 .

10.   கங்கை கொண்டான் (கங்கையைக் கைப்பற்றியவர்) என்று  தன்னைப் பிரகடனப்படுத்திக் கொண்டவர்- முதலாம்  ராஜேந்திரன்.

11.   வடஇந்தியப் போர்களில் பெற்ற வெற்றியின்  நினைவாக எழுப்பப்பட்டது-  கங்கைகொண்ட சோழபுரம்  கோவில். முதலாம் ராஜேந்திரன்.

12.   முதலாம் ராஜேந்திரன் ஸ்ரீவிஜயப் பேரரசைக் (தெற்கு சுமத்ரா) கைப்பற்ற துணைபுரிந்தது – கடற்படை.

13.   விஜயாலயன் வழிவந்த சோழ வம்சத்தின் கடைசி அரசர் – அதிராஜேந்திரன்.

14.   யாருடைய ஆட்சி காலத்தில் சோழர்களுக்கும் கீழை சாளுக்கியர்களுக்கும் இடையிலான திருமண உறவு தொடங்கியது - முதலாம் ராஜராஜன்.

15.   முதலாம் ராஜராஜனின் மகளான குந்தவையை மணந்த சாளுக்கிய இளவரசர் – விமலாதித்தன்.

16.   முதலாம் இராஜேந்திரனின் மகளான அம்மங்கா தேவியை மணந்தவர்- ராஜராஜ நரேந்திரன்.

17.   குந்தவை மற்றும் விமலாதித்தனுடைய மகன் - ராஜராஜ நரேந்திரன்.

18.    அம்மங்காதேவி மற்றும் ராஜராஜ நரேந்திரனுடைய மகன் - முதலாம் குலோத்துங்கன்.

19.    சாளுக்கிய - சோழ வம்சத்தின் ஆட்சியை தொடங்கி வைத்தவர்- முதலாம் குலோத்துங்கன்.

20.   இலங்கையில் சோழர்களுக்கு சொந்தமாக இருந்த பகுதிகளை இழந்தவர் - முதலாம் குலோத்துங்கன்.

21.    1279 ல் பாண்டிய மன்னர் முதலாம் மாறவர்மன் குலசேகர பாண்டியனால் தோற்கடிக்கப்பட்ட கடைசி சோழ வம்சத்தின் மன்னர் - மூன்றாம் ராஜேந்திர சோழன்.

22.   அரசருடைய மூத்தமகன் எவ்வாறு அழைக்கப்பட்டார் – யுவராஜன்.

23.    சோழர்கள் நிர்வாகம் வரிசை - பேரரசு - மண்டலங்கள் - நாடுகள் – கூற்றங்கள்.

24.   சோழர்களின் நிர்வாகத்தில் மிகச்சிறிய அலகு – கிராமம்.

25.   சோழர் ஆட்சி காலத்தில் உள்ளாட்சி நிர்வாகம்- ஊரார், சபையோர், நகரத்தார், நாட்டார்.

26.   சோழ ஆட்சியின் கிராம சபை உறுப்பினர்கள் எவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டனர் என்பது குறித்து தெளிவாக விளக்கும் உத்திரமேரூர் கல்வெட்டுகள் அமைந்துள்ள இடம் – காஞ்சிபுரம்.

27.   சோழர் ஆட்சிக் காலத்தில் நிலவரி (1/3) – காணிக்கடன்.

28.   வேளாளரில் நிலங்களின் உடமையாளர்களாக இருக்க இயலாதவர்-உழுகுடி பிரிவினர்.

29.   கிராம சபை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கும் முறை:

1.  ஒவ்வொரு குடும்பத்திலிருந்தும் (வார்டு) ஒரு உறுப்பினர் தேர்ந்தெடுக்கப்படுவார்.

2.  மொத்தம் இருந்த குடும்பங்கள்- 30.

3. போட்டியிடும் ஆடவர் வயது -35 முதல் 70 .

4.  வேதங்களிலும் சமய நூல்களிலும் தேர்ச்சி பெற்றிருப்பதும், நில உரிமையாளராகவும் சொந்த வீடு உடையவராகவும் இருக்க வேண்டும்.

30.   பிராமணர்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள்- பிரம்மதேயம்.

31.   சமண சமய நிறுவனங்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் - பள்ளிச் சந்தம்.

32.   கோவில்களுக்கு கொடையாக வழங்கப்பட்ட நிலங்கள் - தேவதான கிராமங்கள்.

33.   வேளாண்வகை என்னும் நிலங்களின் உடைமையாளர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்- வேளாளர்.

34.   16- மைல் நீளம் கொண்ட ஏரிக்கரை தடுப்பணையை முதலாம் ராஜேந்திர சோழன் உருவாக்கிய இடம்- கங்கைகொண்ட சோழபுரம்.

35.   நீரைக் கொண்டு வருவது – வாய்க்கால்.

36.   நீரை வெளியேற்றுவது – வடிகால்.

37.   நிர்வாக பிரிவில் மட்டத்தில் பயன்பட்டது- நாடு வாய்க்கால்கள்.

38.   அனைவருக்கும் சொந்தமான வாய்க்கால் - ஊர் வாய்க்கால்.

39.   திருமுறைகளை தொகுத்தவர் - நம்பியாண்டார் நம்பி.

40.    எண்ணாயிரம் என்னும் கிராமத்தில் வேத கல்லூரியை நிறுவியவர்- முதலாம் ராஜேந்திரன்

41.    புதுச்சேரி அருகே திருபுவனை எனும் ஊரில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு - 1048.

42.    செங்கல்பட்டு மாவட்டத்தில் திருமுக்கூடலில் வேத கல்லூரி நிறுவப்பட்ட ஆண்டு- 1067.

43.   பெரியபுராணம்,கம்பராமாயணம் யாருடைய காலத்தில் இருந்த உன்னதமான இலக்கியங்களாகும் – சோழர்கள்.

44.   சோழர்களின் காலத்தில் வணிகம் மேற்கொண்ட வணிகக்குழு கில்டு அமைப்புகள்:

1.  கடல் கடந்து வணிகம் செய்பவர்கள்- அஞ்சு வண்ணத்தார்.

2. உள் நாட்டு வணிகர்கள்- மணி கிராமத்தார்.

45.   அஞ்சு - வண்ணத்தார் குழு உள்ளடக்கியது:

1. மேற்கு ஆசியர்கள்

2. அராபியர்கள்

3. யூதர்கள்

4. கிறிஸ்தவர்கள்

5. இஸ்லாமியர்கள்

46.   அஞ்சு - வண்ணத்தார், மணி – கிராமத்தார் காலப்போக்கில் எவ்வாறு ஒருங்கிணைந்தன- ஐநூற்றுவர் , திசை - ஆயிரத்து ஐந்நூற்றுவர்.

47.   கடல்கடந்த வணிக நடவடிக்கைகளில் செயல்படுத்திய அமைப்பு - ஐநூற்றுவர்.

48.    ஆரம்பகால பாண்டியர்களின் துறைமுகமாகவும் தலைநகரமாகவும் இருந்தது- கொற்கை.

49.   பொ.ஆ. 6 ஆம் நூற்றாண்டில் களப்பிரர்களை வெற்றிகொண்டு தென் தமிழகத்தில் தங்களை மீண்டும் வலுவாக நிறுவி கொண்டவர்கள்- பாண்டியர்கள்.

50.   களப்பிரர் ஆட்சியை முடித்து வைத்தவர் என அரியபடுபவர் – கடுங்கோன்.

51.   பல்லவ அரசர்கள் முதலாம் மகேந்திரவர்மன் , முதலாம் நரசிம்மவர்மன் ஆகியோரின் சமகால பாண்டிய மன்னர்- அரிகேசரி மாறவர்மன்.

52.   அரிகேசரி மாறவர்மன் அரியணை ஏறிய ஆண்டு - கி.பி. 642.

53.   அரிகேசரி மாறவர்மன் சமணர்களை துன்புறுத்திய - கூன்பாண்டியன் என அடையாளப்படுத்தப்படுகிறார் .

54.   அரிகேசரி மாறவர்மனை சமண மதத்திலிருந்து சைவத்திற்கு மாற்றியவர் – திருஞானசம்பந்தர்.

55.    அரிகேசரி மாறவர்மன் எத்தனை சமணர்களைக் கழுவேற்றியதாக கூறப்படுகிறது-8000.

56.   அரிகேசரிக்கு பின்னர் பாண்டிய அரச வம்சத்தின் மகத்தான மன்னர் - முதலாம் வரகுணன். ஜடில பராந்தக நெடுஞ்சடையன்.

57.   வேள்விக்குடி செப்பேடுகளின் கொடையாளி- முதலாம் வரகுணன்.

58.   பல்லவர்களால் தோற்கடிக்கப்பட்ட பாண்டிய மன்னர்கள்:

1. ஸ்ரீமாறன் ஸ்ரீவல்லபன்

2. இரண்டாம் வரகுணன்

59.   920 இரண்டாம் ராஜசிம்மன் எந்த சோழ மன்னனிடம் தோல்வியைத் தழுவினார்- முதலாம் பராந்தகன்.

60.   விஜயாலயனின் வழிவந்த கடைசி அரசர் – அதிராஜேந்திரன்.

61.   பிற்கால பாண்டியர்களின் தலை நகரம் மற்றும் துறைமுகம் - மதுரை மற்றும் காயல்.

62.   வெனிஸ் நாட்டைச் சேர்ந்த பயணி மார்க்கோ போலோ காயலுக்கு வருகை தந்த ஆண்டு- 1288, 1293.

63.   பாண்டிய அரசு "செல்வச் செழிப்புமிக்க, உலகிலேயே மிக அற்புதமான பகுதி என்று புகழாரம் சூட்டியவர் – மார்க்கோ போலோ.

64.   காயல் துறைமுக நகர் அரேபிய, சீனக் கப்பல்கள் நிரம்பியிருந்தது. சதி உடன்கட்டையேறுதல் - வழக்கம் இருந்தது தனது பயண குறிப்புகளில் பதிவு செய்தவர் - மார்க்கோ போலோ.

65.   இலங்கையோடு சேர்ந்து உலகத்தில் காணப்படும் பெரும்பாலான மாணிக்க கற்களையும் முத்துக்களையும் உற்பத்தி செய்வது - காயல் துறைமுகம்.

66.   ஒட்டுமொத்த தமிழகத்தையும் தனது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டு வந்த பாண்டிய அரசர் - சடைய வர்மன் ஜடாவர்மன் சுந்தரபாண்டியன்.

67.   இரண்டாம் பாண்டியப் பேரரசின் புகழ்பெற்ற அரசர்- சடையவர்மன் சுந்தரபாண்டியன்.

68.    சடைய வர்மன் சுந்தரபாண்டியன் ஆட்சி -ஆந்திர மாநிலம் நெல்லூர் வரை பரவி இருந்தது,

69.   சுந்தரபாண்டியனின் மேலாதிக்கத்தை ஏற்றுக் கொண்டு அவருக்கு கப்பம் கட்ட சம்மதித்தவர்- சேர அரசர்,

70.   கண்ணனூர் என்ற இடத்தில் நடைபெற்ற போரில் சுந்தரபாண்டியன் - வீரசோமேசுவரரை.  தோற்கடித்தார்.

71.   சுந்தரபாண்டியனின் ஆட்சியின்போது அவருடன் இரண்டு பேர் கூட்டு அரசர்களாக ஆட்சி செய்தவர்கள் - விக்கிரம பாண்டியன் , வீரபாண்டியன்.

72.   மாறவர்மன் குலசேகரன் ஆட்சி புரிந்த ஆண்டுகள் - 40 ஆண்டுகள்.

73.    மாறவர்மன் குலசேகர பாண்டியனின் மகன்கள்- விக்கிரம பாண்டியன், சுந்தரபாண்டியன்.

74.   மாறவர்மன் குலசேகரன் யாரை கூட்டு அரசனாக நியமித்தார் – வீரபாண்டியன்.

75.   சுந்தர பாண்டியனுக்கு அடைக்கலம் கொடுத்த டெல்லி சுல்தான் - அலாவுதீன் கில்ஜி.

76.   யாருடைய படையெடுப்புக்குப் பின்னர் மதுரை, டெல்லி சுல்தானுக்கு கட்டுப்பட்ட ஒரு முஸ்லிம் அரசு உருவாக்கப்பட்டது – மாலிக்கபூர்.

77.   மதுரை பொதுமக்களால் எவ்வாறு அழைக்கப்பட்டது- கூடல்.

78.   பாண்டிய மன்னர்கள் பாரம்பரியமாக எவ்வாறு மதிக்கப்பட்டனர்­- கூடல்கோன், கூடல் காவலன்.

79.   பாண்டியர்கள் குதிரைகளை எங்கிருந்து இறக்குமதி செய்தனர்- அரேபியா.

80.   பாண்டிய மன்னர்கள் - மனு சாஸ்திரத்தின் படி ஆட்சி செய்தனர்.

81.   பாண்டிய மன்னர்கள் உருவாக்கிய பிராமணர் குடியிருப்புககள் - மங்களம் (அ) சதுர்வேதிமங்கலம்.

82.   நிலத்தின் உண்மையான உடைமையாளர்கள் - பூமி புத்திரர் (அ) வேளாளர்.

83.   சமூக மக்கள் ஒன்றிணைந்த மன்றம் - சித்திர மேழி பெரிய நாட்டார் .

84.   பாண்டியர்கள் ஆட்சியில் அரசு செயலகம் - எழுத்து மண்டபம்.

85.   படைத்தளபதிகளின் பட்டங்கள்:

1. பள்ளி- வேலன்

2. பராந்தகன் பள்ளி வேலன்

3. பராந்தகன் ஆதித்தன்

4.  தென்னவன் தமிழ்வேள்

86.   பாண்டிய நாட்டின் நிர்வாகம் வரிசை- மண்டலம் - வளநாடு - நாடு – கூற்றம்.

87.   நாடுகளை நிர்வகித்தவர்கள்- நாட்டார்.

88.   800 ஆம் ஆண்டை சேர்ந்த மானூர் கல்வெட்டு எதன் தொடர்பான செய்திகளைக் கொண்டுள்ளது - கிராம நிர்வாகம்.

89.   மானூர் கல்வெட்டு - திருநெல்வேலி மாவட்டம்.

90.   பாண்டிய அரசர்கள் - வேத நடைமுறைகளுக்கு ஆதரவு நல்கினர்.

91.   பாண்டிய அரசர்கள் செய்த அஸ்வமேதயாகம்: ஹிரண்ய கர்ப்பம், வாஜ்பேய வேள்வி .

92.   பாண்டிய மன்னர்கள் சைவம், வைணவம் இரண்டையும் சமமாகவே கருதினர்.

93.   பாண்டியர்கள் தமிழ், சமஸ்கிருதம் ஆகியவற்றை ஆதரித்து வளர்த்தனர்.

94.   துறைமுகத்தில் மாலிக் உல் இஸ்லாம் ஜமாலுதீன் எனும் அரேபிய வணிகரின் வணிக நிறுவனம் செயல்பட்டது - காயல்.

95.   அரசர்கள் குதிரைகளுக்குகாக முதலீடு செய்தனர் என்று குறிப்பிட்டுள்ளவர்கள்-

1. மார்கோபோலோ

2. வாசப்

96.   குதிரை வணிகம் குறித்து எழுதியவர் – வாசப்.

97.   10000 மேற்பட்ட குதிரைகள் காயலிலும் ஏனைய இந்திய துறைமுகத்திலும் இறக்குமதி ஆயின.

98.   ஜமாலுதீன் பொறுப்பில் இனப்பெருக்கம் செய்து வளர்ந்து வந்த குதிரைகள்-1400 குதிரைகள்

99.   ஒவ்வொரு குதிரையின் சராசரி விலை - 200 தினார்கள்.

100.  குதிரை வணிகத்தில் ஈடுபட்டவர்களை எவ்வாறு அழைத்தனர் - குதிரைச் செட்டிகள்.

101.  பொருத்துக:

1. மதுரை - பாண்டியர்களின் தலைநகர்

2. கங்கைகொண்ட சோழபுரம்   - சோழர்களின் தலைநகர்

3. அஞ்சு வண்ணத்தார்  - கடல்சார் வணிகர்

4.  மணி - கிராமத்தார் - உள்நாட்டு வணிகர்

102.  ராஜேந்திர சோழன் சூட்டிக்கொண்ட பட்டம் - கங்கைகொண்ட சோழன்.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.