6) கீழ்க்கண்டவற்றில் எந்த இணை தவறானது?
i) இளஞ்சேட்சென்னி – செங்குட்டுவன்
ii) மாங்குளம் – தமிழ் பிராமி கல்வெட்டு
iii) உருத்திரங்கண்ணனார் – பட்டினப்பாலை
iv) வேளிர்குல சிற்றரசர் – திதியன்
a) i மட்டும்
b) ii மட்டும்
c) iii மட்டும்
d) iv மட்டும்
7) தமிழ்நாட்டில் கண்டுபிடிக்கப்பட்ட சோழர்களின் ஆரம்பகால செப்புத்தகடு கல்வெட்டுகள்
I) திருவாலங்காடு செப்புப் பட்டயம்
II) வேள்விக்குடி செப்புப் பட்டயம்
III) வேலூர் பாளையம் பட்டயம்
IV) சின்னமனூர் செப்புப் பட்டயம்
a) I மட்டும்
b) II மற்றும் III மட்டும்
c) I மற்றும் III மட்டும்
d) III மற்றும் IV மட்டும்
8) வரிசை Iல் உள்ளதை IIல் வரிசையுடன் பொருத்தி சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
A) குறிஞ்சி – 1) இந்திரன்
B) முல்லை – 2) முருகன்
C) மருதம் – 3) திருமால்
D) நெய்தல் – 4) வருணன்
a) 2, 3, 1, 4
b) 3, 2, 1, 4
c) 2, 1, 3, 4
d) 3, 1, 2, 4
9) கடையெழு வள்ளல்களில் நீலமணியையும், நாகம் தந்த கலிங்கத்தையும் சிவனுக்கு அளித்தவர் யார்?
a) காரி
b) ஓரி
c) ஆய் அண்டிரன்
d) நல்லி
10) வரிசை I-ல் காணும் தொல்லியல் ஆய்வு இடங்களை வரிசை II-ல் உள்ள அவற்றின் மாவட்டங்களுடன் பொருத்துக.
A) கொடுமணல் – 1) தூத்துக்குடி
B) பொருந்தல் – 2) விழுப்புரம்
C) திருவக்கரை – 3) ஈரோடு
D) ஆதிச்சநல்லூர் – 4) திண்டுக்கல்
a) 1, 3, 2, 4
b) 3, 4, 2, 1
c) 3, 4, 1, 2
d) 1, 2, 4, 3
11) கீழ்க்காணும் பத்தியைக் கவனமாக படித்து, சரியான விடையைத் தேர்ந்தெடுக்கவும்.
இந்த ஊர் திருநெல்வேலி மாவட்டத்தில் நம்பி ஆற்றின் இடது கரையில் அமைந்துள்ளது. நம்பி ஆற்றங்கரையில் இரும்புக்கால கலாச்சாரத்தின் வேர்களை தேடுவதற்காக ஒரு அகழ்வாராய்ச்சி மேற்கொள்ளப்பட்டது. இது பழங்கால பொருட்களுக்கு பெயர் பெற்ற ஒரு செழிப்பான தொல்லியல் இடம் இவ்விடத்தின் பெயர்
a) துலுக்கர்பட்டி
b) கீழடி
c) வெம்பக்கோட்டை
d) பெரம்பலூர்
12) எந்தத் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் முதலில் பாண்டியர்களின் முத்துச் சந்தையைக் கண்டுபிடித்தார்?
a) நாகசாமி
b) கால்டுவெல்
c) கே.வி. ராமன்
d) எஸ். பரணவிதான
13) வலியுறுத்தல் மற்றும் காரணம் வகை :
வலியுறுத்தல் (A) : தமிழக ஆட்சியாளர்கள் தமிழ் மற்றும் தமிழ் புலவர்களை அவர்கள் அவையில் ஆதரவளித்தனர்.
காரணம் (R) : மன்றம், அவை, அம்பலம் மற்றும் மன்று போன்ற சொற்கள் அரச அவையை குறிப்பிட்டது.
a) (A) என்பது உண்மை ஆனால் (R) என்பது தவறு
b) (A) மற்றும் (R) இவை இரண்டும் உண்மை மற்றும் (R) என்பது (A) யின் சரியான விளக்கம்
c) (A) என்பது தவறு (R) என்பது உண்மை
d) (A) மற்றும் (R) இவை இரண்டும் உண்மையானது. ஆனால், (R) என்பது (A) யின் சரியான விளக்கம் அல்ல.
14) தமிழகத்தில் எங்கு வழவழப்பாக்கப்பட்ட கற்கருவிகள் பெருமளவில் கிடைத்தன?
a) பையம்பள்ளி
b) புதுக்கோட்டை
c) திருநெல்வேலி
d) திருவண்ணாமலை
15) சங்க காலத்தில் பெண்கள் தலை முடியில் அணிந்த ஆபரணம் எது?
a) தொய்யகம்
b) புல்லகம்
c) வயந்தகம்
d) வலம்புரி
16) பின்வரும் துறைமுகங்களில் சங்ககால துறைமுகமில்லாத நகரம் எது?
a) புகார்
b) கொற்கை
c) தொண்டி
d) உறையூர்
17) ‘இந்திய மருந்து’ எனக் கிரேக்க மருத்துவர் ஹிப்போகிரேட்டஸ் கூறிய பொருள் எது?
a) மிளகு
b) மஞ்சள்
c) வேம்பு
d) பட்டை
18) சிந்துவெளி வரிவடிவங்கள் பழந்தமிழோடு தொடர்புடையது என்று தெரிவித்தது யார்?
a) ஐ. மகாதேவன்
b) ஆர். நாகசாமி
c) யூ. நோரோசோவ்
d) ஆ. வேலுப்பிள்ளை
19) சங்க இலக்கியத்தில் போர் கடவளாக குறிப்பிடப்பட்ட தெய்வம் எது?
a) திருமால்
b) சிவன்
c) முருகன்
d) இந்திரன்
20) சங்ககாலத்தில் ‘அம்பணம்’ என்பது யாது?
a) ஒரு இசைக்கருவி
b) நெல்லை அளக்க பயன்படும் கருவி
c) ஒரு வகை நடனம்
d) ஒரு வகை திருவிழா
21) குடுமியான்மலை கல்வெட்டு ———— பற்றி விளக்குகின்றது
a) இசை
b) நாடகம்
c) கிராம ஆட்சி முறை
d) நடனம்
22) கீழ்க்கண்டவற்றில் எது (எவை) பொருந்தவில்லை?
I) பெருங்கற்கால புதையல் – சித்தன்னவாசல்
II) தாழி புதையல் – மல்லப்பாடி
III) கண்ணாடி தொழிற்சாலை – காரைக்காடு
IV) இசைக்கல்வெட்டு – அரச்சலூர்
a) I மட்டும்
b) II மற்றும் IV மட்டும்
c) III மற்றும் IV மட்டும்
d) IV மட்டும்
23) பின்வரும் எந்த கல்வெட்டில் ‘தமிழ் கூட்டமைப்பின் சீர்குலைவு’ பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது?
a) அலகாபாத் தூண் கல்வெட்டு
b) காரவேலாவின் ஹதிகும்பா கல்வெட்டு
c) ஜூனாகத் கல்வெட்டு
d) மெஹரலி தூண் கல்வெட்டு
24) பின்வருவனவற்றுள் சரியானதை பொருத்துக :
I) பெரும்பாலை – தருமபுரி
II) மயிலாடும்பாறை – தூத்துக்குடி
III) சிவகளை – கிருஷ்ணகிரி
IV) துலுக்கர்பட்டி – திருநெல்வேலி
a) I மற்றும் IV சரி
b) II மற்றும் III சரி
c) I மற்றும் II சரி
d) III மற்றும் IV சரி
25) ஓவாமலை தொல்லியல் இடம் எங்கு அமைந்துள்ளது?
a) மதுரை
b) திருநெல்வேலி
c) சிவகங்கை
d) தஞ்சாவூர்
26) அத்திரப்பாக்கத்தில் கண்டுபிடிக்கப்பட்ட கற்கருவிகள் ———— காலத்தை சார்ந்தவை
a) பழைய கற்காலம்
b) புதிய கற்காலம்
c) இடை கற்காலம்
d) பெருங் கற்காலம்
27) பழங்கற்கால கருவிகள் என்பது
I) ஈட்டிகள்
II) கூர்மையான முனைகள் கொண்ட வட்டமான கற்கள்
III) இருபுறமும் கூர்மையான கத்திகள்
IV) முட்டை வடிவில் கூர்மையான கருவிகள்
a) I மட்டும்
b) II மட்டும்
c) I, II மற்றும் III மட்டும்
d) I, II, III மற்றும் IV
28) கீழ்க்கண்டவைகளில் தமிழ் மன்னர்களின் கூட்டமைப்பை தெரிவிக்கும் கல்வெட்டு எது?
a) ஹதிகும்பா கல்வெட்டு
b) வேள்விக்குடி பட்டய செப்பேடு
c) திருக்கோவிலூர் கல்வெட்டு
d) சின்னமனூர் பட்டய செப்பேடு
29) அழகன்குளம் அகழ்வாராய்ச்சி இடம் ———— மாவட்டத்தில் அமைந்துள்ளது.
a) இராமநாதபுரம்
b) மதுரை
c) திருநெல்வேலி
d) தஞ்சாவூர்
30) தொல்பொருள் ஆராய்ச்சி இடங்களைப் பொருத்துக.
A) ஆதிச்சநல்லூர் – 1) சிவகங்கை
B) மாங்குளம் – 2) தூத்துக்குடி
C) கொடுமணல் – 3) மதுரை
D) கீழடி – 4) ஈரோடு
a) 2, 3, 4, 1
b) 3, 4, 2, 1
c) 4, 3, 1, 2
d) 2, 3, 1, 4
31) சோழர்களை பற்றி குறிக்கும் முதல் கல்வெட்டு எது?
a) அசோகரின் சிறிய பாறைக் கல்வெட்டுகள்
b) அசோகரின் 12வது பாறைக் கல்வெட்டு
c) அசோகரின் 13வது பாறைக் கல்வெட்டு
d) அசோகரின் 14வது பாறைக் கல்வெட்டு
32) தமிழ்நாட்டின் மாமல்லபுரத்தில் அமைந்துள்ள நினைவுச்சின்ன தொகுப்புகளில் இடம் பெறாதது எது?
a) அர்ஜூனன் தபசு
b) கடற்கரைக் கோயில்
c) ஐந்து ரதம்
d) ஆயி மண்டபம்
33) குடுமியான்மலை கல்வெட்டில் காணப்படும் “பரிவாதினி” என்ற சொல் எதைக் குறிப்பிடுகின்றது?
a) ஒரு ஆசிரியர்
b) ஒரு ராகம்
c) வீணை
d) மிருதங்கம்
34) கீழ்க்கண்டவற்றில் சங்க கால பெண்கள் நெற்றியில் அணியும் நகைகளில் அடங்காதது எது?
a) வயந்தகம்
b) புல்லகம்
c) மகரபகுவை
d) முத்தாரை
35) அசோகரின் எந்த முக்கிய பாறை ஆணையில் சேர, சோழ மற்றும் பாண்டிய மன்னர்களை பற்றிய குறிப்பு இடம்பெற்றுள்ளது?
a) XIII வது பாறை ஆணை
b) I வது பாறை ஆணை
c) VI வது பாறை ஆணை
d) IX வது பாறை ஆணை
36) ———— கல்வெட்டு சோழர்களின் கிராம நிர்வாக முறையை பற்றி குறிப்பிடுகிறது.
a) உத்திரமேரூர் கல்வெட்டு
b) பட்டிபுரோலு கல்வெட்டு
c) மீனாட்சிபுரம் கல்வெட்டு
d) திருவிசலூர் கல்வெட்டு
37) ‘யவன பிரியா’ என்ற சொல் ———— ஐக் குறிக்கின்றது.
a) மிளகு
b) மஞ்சள்
c) இஞ்சி
d) ஏலக்காய்
38) படையாட்சியர் ———— வகுப்பினர் ஆவர்
a) இசைக் கலைஞர்கள்
b) நடனக் கலைஞர்கள்
c) வேட்டைக்காரர்கள்
d) போராளிகள்
39) நிலப்பகுதிகளை அதோடு தொடர்புடைய விலங்குகளுடன் பொருத்துக.
A) குறிஞ்சி – 1) ஆடு
B) பாலை – 2) எருமை
C) முல்லை – 3) புலி
D) மருதம் – 4) நரி
a) 4, 3, 2, 1
b) 2, 1, 3, 4
c) 3, 4, 1, 2
d) 3, 2, 1, 4
40) தமிழகத்தில் எங்கு காலத்தால் முந்திய நுண்கற்கால நினைவுச் சின்னங்கள் கிடைத்தன?
a) செங்கல்பட்டு
b) தஞ்சாவூர்
c) திருவண்ணாமலை
d) தூத்துக்குடி
41) கீழ்க்கண்டவற்றில் முல்லை நில தலைவன் அல்லாதவர் யார்?
a) அண்ணல்
b) தோன்றல்
c) நாடான்
d) வெற்பன்
42) நடுகல் வழிபாட்டின் ஆறு படிநிலைகளை குறிப்பிடும் நூல் எது?
a) சிலப்பதிகாரம்
b) மணிமேகலை
c) திருக்குறள்
d) தொல்காப்பியம்
43) ‘அல்விளை பிரமாண இசைவு திட்டு’ என்பது
a) ஏற்றுமதி வரி
b) இறக்குமதி வரி
c) அடிமை வரி
d) அடிமை விற்பனை விலை ஆவணம்
44) பின்வருபவைகளில் தமிழ் பெண்களுக்கு இருக்க வேண்டிய முக்கியமான நற்பண்பாக கருதப்பட்டது எது?
a) அன்பு
b) அறம்
c) கற்பு
d) வீரம்
45) ரோமானிய தொழிற்சாலை கண்டெடுக்கப்பட்ட இடம்
a) அரிக்கமேடு
b) ஆதிச்சநல்லூர்
c) கீழடி
d) பூம்புகார்
46) பின்வரும் துறைமுகங்களில் சங்ககால துறைமுகமில்லாத நகரம் எது?
a) புகார்
b) கொற்கை
c) தொண்டி
d) உறையூர்
47) எந்த இடத்தில் சங்ககால சோழர்களின் காசுகள் தொல்லியர்களால் கண்டுபிடிக்கப்பட்டன?
a) அரிக்கமேடு
b) கரூர்
c) தஞ்சாவூர்
d) உறையூர்
48) ‘கல்நிறுத்தி வைக்கும் மரபு’ தமிழகத்தில் எங்கு காணப்படுகிறது?
a) கொடுமணல்
b) காஞ்சிபுரம்
c) ஆதிச்சநல்லூர்
d) கீழடி
49) தமிழ்நாட்டில் நகரமயமாதல் ———— நூற்றாண்டிலிருந்து தொடங்குகிறது என்பதை கீழடி அகழாய்வு கூறுகின்றது.
a) 3ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
b) 4ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
c) 5ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
d) 6ம் நூற்றாண்டு பொ.ஆ.மு.
50) ஆதிச்சநல்லூர் அகழ்வாய்வை முதன்முதலில் மேற்கொண்டவர்
a) ஜான் மார்ஷல்
b) ஆன்ட்ரூ ஜாகோர்
c) புரூஸ் பூட்
d) கன்னிங்ஹாம்