” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது
சகோதர சகோதரிகளுக்கு மட்டும் ”
நூல் வெளி |
---|
• நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தின் முதலாயிரத்தில் 691ஆவது பாசுரம் பாடப்பகுதியில் கொடுக்கப்பட்டுள்ளது.
• பெருமாள் திருமொழி நாலாயிரத் திவ்வியப் பிரபந்தத்தில் ஐந்தாம் திருமொழியாக உள்ளது. • இதில் 105 பாடல்கள் உள்ளன. • இதனைப் பாடியவர் குலசேகராழ்வார். • இவரின் காலம் எட்டாம் நூற்றாண்டு. |
பாடம் 4.3. பரிபாடல் - கீரந்தையார் (எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று)
நூல் வெளி |
---|
• பரிபாடல் எட்டுத்தொகை நூல்களுள் ஒன்றாகும்.
• பாடப்பகுதியிலுள்ள பாடலை எழுதியவர் கீரந்தையார். • இந்நூல் "ஓங்கு பரிபாடல்" எனும் புகழுடையது. • இது சங்க நூல்களுள் பண்ணோடு பாடப்பட்ட நூல். • உரையாசிரியர்கள் இதில் எழுபது பாடல்கள் இருப்பதாகக் கூறியுள்ளனர். • இன்று 24 பாடல்களே கிடைத்துள்ளன. • ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வாழ்ந்த தமிழ் மக்களின் வாழ்க்கை முறை, சமூக உறவு அறிவாற்றல், இயற்கையைப் புரிந்துகொள்ளும் திறன் போன்றவற்றைச் சங்க இலக்கியம் மூலம் நாம் அறிந்துகொள்கிறோம். |