திரிகடுகம் & ஏலாதி Study Notes & Online Test

திரிகடுகம் [7th Old Tamil Book]
ஆசிரியர் குறிப்பு: திரிகடுகத்தின் ஆசிரியர் நல்லாதனார். • இவர் திருநெல்வேலி மாவட்டத்தைச் சேர்ந்த திருந்து என்னும் ஊரினர் என்பர்.
• இவரைச், செருஅடுதோள் நல்லாதன் எனப் பாயிரம் குறிப்பிடு வதனால், இவர் போர்வீரராய் இருந்திருக்கலாம் எனக் கருதப்படுகிறது.
நூல் குறிப்பு: திரிகடுகம், பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஒன்று.
• இந்நூல் நூறு வெண்பாக்களை உடையது. சுக்கு, மிளகு, திப்பிலியால் ஆன மருந்துக்குப் பெயர் திரிகடுகம்.
• இம்மருந்தை உண்ட மனிதர்களுக்கு உடல்நோய் நீங்கும். இதனைப்போன்றே ஒவ்வொரு திரிகடுகப் பாடலிலும் இடம்பெற்றுள்ள மூன்று கருத்தும் மக்களின் மனமயக்கத்தைப் போக்கித் தெளிவை ஏற்படுத்தும்.
நூல் பயன் : திரிகடுகம் பாடல்களிலுள்ள மூன்று அறக்கருத்தும் கற்பாரின் மனத்திலுள்ள அறியாமையாகிய நோயைப் போக்கி, அவரைக் குன்றின்மேலிட்ட விளக்காகச் சமுதாயத்தில் விளங்கச் செய்யும்.

ஏலாதி [10th Old Tamil Book]
ஆசிரியர் குறிப்பு: ஏலாதியை இயற்றியவர் கணிமேதாவியார்.
• இவருக்குக் கணிமேதையர் என்னும் மற்றொரு பெயருமுண்டு இவர், சமண சமயத்தவர் என்பர்.
• இவர், சமண சமயத்திற்கே உரிய கொல்லாமை முதலான உயரிய அறக்கருத்துகளை ஏலாதியில் வலியுறுத்திக் கூறுகிறார்.
• இவர் காலம் கி.பி. ஐந்தாம் நூற்றாண்டு. இவர், திணைமாலை நூற்றைம்பது என்னும் நூலையும் இயற்றியுள்ளார்.
நூற்குறிப்பு : பதினெண்கீழ்க்கணக்கு நூல்களுள் ஏலாதியும் ஒன்று.
• இந்நூல் சிறப்புப் பாயிரம், தற்சிறப்புப் பாயிரம் உட்பட எண்பத்தொரு வெண்பாக்களைக் கொண்டுள்ளது.
• நான்கடிகளில் ஆறு அருங்கருத்துகளை இந்நூல் நவில்கிறது.
• இந்நூல் தமிழருக்கு அருமருந்து போன்றது.
ஏலம் என்னும் மருந்துப்பொருளை முதன்மையாகக்கொண்டு இலவங்கம், சிறுநாவற்பூ, சுக்கு, மிளகு, திப்பிலி, ஆகியவற்றினால் ஆன மருந்துப் பொருளுக்கு ஏலாதி என்பது பெயர்.
• இம்மருந்து, உண்ணுபவரின் உடற்பிணியைப் போக்கும். அதுபோல, இந்நாலின் நற்கருத்துகள், கற்போரின் அறியாமையை அகற்றும்.
• இந்நூலின் ஐம்பத்தொன்பதாவது பாடல், நமக்குப் பாடமாக அமைந்துள்ளது.

Online Test

Welcome to TNPSC
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong






























கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.