6th New Tamil Unit -2 Book Back

நூல்வெளி

பாடம் 2.1 சிலப்பதிகாரம்

1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் இளங்கோவடிகள்.

2. இவர் சேர மன்னர் மரபைச் சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரப் பதிகம் கூறுகிறது.

3. இவர் காலம் கி.பி. இரண்டாம் நூற்றாண்டு என்பர்.

4. ஐம்பெருங்காப்பியங்களுள் ஒன்று சிலப்பதிகாரம்.

5. இதுவே தமிழின் முதல் காப்பியம். இது முத்தமிழ்க் காப்பியம், குடிமக்கள் காப்பியம் என்றெல்லாம் போற்றப்படுகிறது.

6. சிலப்பதிகாரமும் மணிமேகலையும் இரட்டைக் காப்பியங்கள் என்று அழைக்கப்படுகின்றன.

7. திங்கள், ஞாயிறு, மழை என இயற்கையை வாழ்த்துவதாக இந்நூல் தொடங்குகிறது.

பாடம் 2.2 காணி நிலம்

1. இருபதாம் நூற்றாண்டின் இணையற்ற கவிஞர் பாரதியார்.

2. அவரது இயற்பெயர் சுப்பிரமணியன்.

3. இளமையிலேயே சிறப்பாகக் கவிபாடும் திறன் பெற்றவர்.

4. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர்.

5. தம் கவிதையின் வழியாக விடுதலை உணர்வை ஊட்டியவர்.

6. மண் உரிமைக்காகவும் பெண் உரிமைக்காகவும் பாடியவர்.

7. நாட்டுப்பற்றும் மொழிப்பற்றும் மிக்க பாடல்கள் பலவற்றைப் படைத்தவர்.

8. பாஞ்சாலி சபதம், கண்ணன் பாட்டு, குயில் பாட்டு முதலிய பல நூல்களை இயற்றி உள்ளார்.

9. பாரதியார் கவிதைகள் என்னும் தொகுப்பில் இப்பாடல் இடம் பெற்றுள்ளது.


கோடிட்ட இடங்களை நிரப்புக

பாடம் 2.1 சிலப்பதிகாரம்

1. சிலப்பதிகாரம் என்னும் காப்பியத்தை இயற்றியவர் __________ விடை : இளங்கோவடிகள்.

2. இளங்கோவடிகள் _________________ சேர்ந்தவர் என்று சிலப்பதிகாரம் கூறுகிறது.

விடை : சேர மன்னர் மரபைச்

3. ‘சென்னி’ என்பது _________________ -க் குறிக்கும் பெயர்? விடை : சோழனை

4. “திகிரி” என்பது குறிக்கும் பொருள் __________? விடை : சக்கரம்

5. ‘நாம’ என்னும் சொல் உயர்த்தும் பொருள் _________? விடை : அச்சம்

 

பாடம் 2.2 காணி நிலம்

6. பாரதியாரின் இயற்பெயர் __________ விடை :  சுப்பிரமணியன்

7. எட்டயபுர மன்னரால் பாரதி என்னும் பட்டம் வழங்கிச் சிறப்பிக்கப்பட்டவர் ____________  விடை :  பாரதியார்.

8. பாரதியார் _________, __________, _________ நூல்களை இயற்றி உள்ளார்.

விடை :  பாஞ்சாலிசபதம், கண்ணன்பாட்டு, குயில்பாட்டு

 

பாடம் 2.3 சிறகின் ஓசை

9. மிக நீண்டதொலைவு பறக்கும் பறவை __________ விடை : ஆர்டிக் ஆலா

10. பறவைகள் வலசை போவதைப் பற்றிப் பாடிய தமிழ்ப்புலவர் ___________

விடை : சத்திமுத்தப் புலவர்

11. பறவைகள் இடம்பெயர்வதற்கு ______________ என்று பெயர். விடை : வலசைபோதல்

12. இந்தியாவின் பறவை மனிதர் _____________ விடை : டாக்டர் சலீம் அலி

13. பறவைகள் வலசை போகக் காரணங்களுள் ஒன்று _____________

விடை : தட்ப வெப்பநிலை மாற்றம்  

14. “நாராய் நாராய்” எனத் தொடங்கும் பாடலை எழுதியவர் _____________

விடை : சத்திமுத்தப்புலவர்

15. உலகச் சிட்டுக் குருவிகள் நாள் __________ விடை : மார்ச் 20

16. __________ பெரும்பாலும் வலசை போகின்றன. விடை : நீர்வாழ் பறவைகளே

17. ஆண் குருவியின் தொண்டைப் பகுதி ___________ இருக்கும். விடை : கறுப்பு நிறத்தில்

18. சிட்டுக்குருவி __________ நாள்கள் அடைகாக்கும். விடை : பதினான்கு

19. டாக்டர் சலீம் அலியின் தன்வரலாற்று நூலுக்குப் பெயர் _______ விடை : சிட்டுக்  குருவியின் வீழ்ச்சி.

20. ஆர்டிக் ஆலா ___________ பயணம் செய்யும் பறவையினமாகும். விடை : 22,000 கி.மீ

21. _____ – என்று பாரதியார் பாடினார்? விடை : காக்கைகுருவி எங்கள் சாதி

22. வெளிநாட்டுப் பறவைகளுக்கும் புகலிடமாகத் திகழ்கிறது _________? விடை : தமிழ்நாடு

23. சிறகடிக்காமல் கடலையும் தாண்டிப் பறக்கும் பறவை ___________? விடை : கப்பல் பறவை (Frigate bird).

24. கப்பல் பறவை தரையிறங்காமல் _____________ வரை பறக்கும்? விடை : 400 கிலோ மீட்டர்

25. கப்பல் பறவை ___________, ____________ என்றும் அழைக்கப்படுகிறது? விடை : கப்பல் கூழைக்கடா , கடற்கொள்ளைப் பறவை

பாடம் 2.5 முதலெழுத்தும், சார்பெழுத்தும்

26. முதல் எழுத்துகளைச் சார்ந்து வரும் எழுத்துகள் ____________ விடை : சார்பெழுத்துகள்

27. ___________ பிற எழுத்துகள் தோன்றுவதற்கும் இயங்குவதற்கும் முதற்காரணமாக இவை

இருக்கின்றன? விடை : முதல் எழுத்துகள்

28. உயிர்மெய் எழுத்தின் ஒலிவடிவம் _____________ சேர்ந்ததாக இருக்கும்? விடை : மெய்யும் உயிரும்

29. மூன்று புள்ளிகளை உடைய ___________ தனித்த வடிவம் பெற்றது? விடை : ஆய்த எழுத்து

30. ____________ தனித்து இயங்காது? விடை : ஆய்த எழுத்து

31. உயிர் எழுத்துகள் ____________? விடை : பன்னிரண்டு

32. மெய்யெழுத்துகள் _______________? விடை : பதினெட்டு 

33. உயிர்மெய் எழுத்துக்கள் ___________? விடை : இருநூற்றி பதினாறு

பொருத்துக

பாடம் 2.1 சிலப்பதிகாரம்

1. குடை -       அ. ஞாயிறு

2. சக்கரம் -     ஆ. மழை

3. அருள் -       இ. திங்கள்

விடை : 1 – இ, 2 – அ, 3 – ஆ

 

பாடம் 2.2 காணி நிலம்

பொருத்துக

1. தூண் -        அ. முத்துச்சுடர்

2. மாடம் -      ஆ. அழகு

3. நிலா ஒளி - ஆ. தூயநிறம்

விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

 

பொருத்துக.

1. முத்துச்சுடர்போல -          அ. தென்றல்

2. தூய நிறத்தில் -     ஆ. நிலாஒளி

3. சித்தம் மகிழ்ந்திட -          இ. மாடங்கள்

விடை : 1 – ஆ , 2 – இ, 3 – அ

சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக


சரியான விடையைத் தேர்ந்தெடுத்து எழுதுக

Welcome to TNPSC
Total Score
Well done! you are correct
Sorry, you are wrong






























:

  • tnpsc
  • tnpsc group 4
  • tnpsc group 2
  • tnpsc group 4 syllabus
  • tnpsc login
  • tnpsc photo compressor
  • tnpsc exam date
  • tnpsc exam
  • tnpsc exam details
  • tnpsc exam apply
  • tnpsc portal
  • tnpsc maths book pdf
  • tnpsc tamil book pdf
  • Tamil Nadu Public Service Commission
  • tnpsc News
  • tnpsc recruitment
  • tnpsc apply oline
  • tnpsc notification
  • www.tnpsc.gov.in latest news
  • tnpsc new syllabus
  • tnpsc notes
  • TNPSC Illakkanam
  • இலக்கணம்
  • TNPSC New Syllabus
  • குரூப்-4 தமிழ் இலக்கணம்

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.