8th தமிழ் நூல் வெளி இயல் - 5

 ” எந்தவித கட்டண பயிற்சி மையத்திற்கு செல்லாமல் படிக்கும் எனது சகோதர சகோதரிகளுக்கு மட்டும்  
இயல் 5 : குழலினிது யாழினிது
பாடம் 5.1. திருக்கேதாரம்
நூல் வெளி
• சுந்தரர், தேவாரம் பாடிய மூவருள் ஒருவர்.
• இவர் நம்பியாரூரர், தம்பிரான் தோழர் என்னும் சிறப்புப் பெயர்களால் அழைக்கப்படுகிறார்.
• இவர் அருளிய தேவாரப்பாடல்கள் பன்னிரு திருமுறைகளுள் ஏழாம் திருமுறையாக வைக்கப்பட்டுள்ளன.
• இவர் இயற்றிய திருத்தொண்டத் தொகையை முதல் நூலாகக் கொண்டே சேக்கிழார் பெரியபுராணத்தைப் படைத்தளித்தார்.
• திருஞானசம்பந்தர், திருநாவுக்கரசர், சுந்தரர் ஆகிய மூவர் பாடிய பாடல்களின் தொகுப்பே தேவாரம் ஆகும்.
• இந்நூலைத் தொகுத்தவர் நம்பியாண்டார் நம்பி ஆவார்.
• இந்நூலில் சுந்தரர் பாடியுள்ள கேதாரப்பதிகப்பாடல் ஒன்று இங்குத் தரப்பட்டுள்ளது.
• தே + ஆரம் - இறைவனுக்குச் சூட்டப்படும் மாலை என்றும், தே + வாரம் - இனிய இசை பொருந்திய பாடல்கள் எனவும் பொருள் கொள்ளப்படும்.
• பதிகம் என்பது பத்துப் பாடல்களைக் கொண்டது.

பாடம் 5.2. பாடறிந்து ஒழுகுதல்
நூல் வெளி
• கலித்தொகை எட்டுத்தொகை நூல்களுள் ஒன்று.
• இது கலிப்பா என்னும் பாவகையால் ஆன நூல்;
• நூற்று ஐம்பது பாடல்களைக் கொண்டது.
• குறிஞ்சிக்கவி, முல்லைக்கலி, மருதக்கலி, நெய்தற்கலி, பாலைக்கலி என்னும் ஐந்து பிரிவுகளை உடையது.
• கலித்தொகையைத் தொகுத்த நல்லந்துவனார் சங்ககாலப் புலவர்களுள் ஒருவர்.
• நெய்தற்கலிப் பாடல்களை இயற்றியவரும் இவரே.

கருத்துரையிடுக

0 கருத்துகள்
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.